பறிமுதல் செய்தது ரூ.8 லட்சம்: திரும்ப வழங்கியது ரூ.4.75 லட்சம்
உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், தேர்தல் அலுவலர்கள் சோதனையில், 8 லட்சத்து, 517 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், விதி மீறல்கள் மற்றும் பணம், பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்கும் வகையில், சட்டசபை தொகுதி வாரியாக, பறக்கும் நடை, நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, வாகன சோதனைகள் நடந்து வருகிறது.
நேற்று வரை, உடுமலை தொகுதியில் கணக்கில் வராமல் கொண்டு வந்த, ரூ. 2 லட்சமும், மடத்துக்குளம் தொகுதியில், 6 லட்சத்து, 517 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குறை தீர்க்கும் குழுவில் உரிய ஆவணங்களை வழங்கியதன் அடிப்படையில், மடத்துக்குளம் தொகுதி கண்காணிப்பு அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்ட, 4 லட்சத்து, 75 ஆயிரத்து, 47 ரூபாய் திரும்ப வழங்கப்பட்டது.
மேலும்
-
மேயர் பிரியா மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம்; உழைப்புக்கு மரியாதை இல்லை என புலம்பல்
-
முதல்வர் திறந்து வைத்த தங்கும் விடுதிக்கு உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி இல்லை; மின் இணைப்பு பெற முடியாமல் கோயில் நிர்வாகம் தவிப்பு
-
அன்பழகன் பேரனுக்கு வாய்ப்பு மறுப்பு
-
திருத்தணி புதிய பேருந்து நிலையத்தில் நாளை முதல் பஸ்கள் இயக்கப்படும் கமிஷனர் அறிவிப்பு
-
அ.தி.மு.க., வேட்பாளருக்கு கும்மிடியில் உற்சாக வரவேற்பு
-
தே.மு.தி.க.,வினர் கொண்டாட்டம்