டூவீலர் மீது லாரி மோதல் அரசு பஸ் டிரைவர் பலி

பென்னாகரம்:பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னம்பள்ளியை சேர்ந்தவர் விக்னேஷ், 38. இவர் மேட்டூர் அரசு போக்குவரத்து பணிமனையில், அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார்.


வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு, தன் ஹூரோ ஸ்பிளண்டர் டூவீலரில் மேட்டூர் நோக்கி, மேச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தார். தொப்பையாறு அருகே ஆயமரத்துப்பட்டி பகுதியில் எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement