'தேர்தல் திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள்'

கோபி:'வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை' என்ற தலைப்பில், உறுதி மொழி ஏற்பு, கலை நிகழ்ச்சி, கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பேரணி, கோபி பஸ் ஸ்டாண்டில் நடந்தது.


இதில் பங்கேற்ற மாவட்ட தேர்தல் அலுவ-லரும், கலெக்டருமான கந்தசாமி பேசியதாவது:ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க, அனைத்து தரப்பு மக்களும், தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும். இதற்காகவே, 100 சதவீத ஓட்டளிப்பை வலியுறுத்தி, இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகிறோம். அதாவது உங்களின் ஓட்டு, ஒரு ஆட்-சியை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு என்பதை புரிந்து ஓட்ட-ளிக்க வேண்டும்.

நாம் ஒரு சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துகிறோம். அந்த மகிழ்ச்சியோடு, ஆரவாரத்தோடு, நீங்கள் அனைவரும் தேர்தல் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். கோபி பஸ் ஸ்டாண்டில், வாக்காளர்க-ளுடன், கலெக்டர் உள்ளிட்டோர் செல்பி எடுத்து கொண்டனர்.

Advertisement