தேர்தலுக்கு தயாராகும் விழிப்புணர்வு வாகனம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வாக்காளர்களிடம் தேர்தல் விழிப்புணர்வுக்காக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வாகனங்களை தயார் செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சட்டசபை பொது தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்ட தேர்தல் அலுவலர் ேஷக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், தேர்தல் பணிகளிலும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரங்கள், ஊர்வலம், கூட்டம் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதையொட்டி, விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், வாக்காளர்களுக்கு தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இந்த வாகனத்தில் இருந்த தமிழக அரசின் சாதனை திட்டங்கள் அனைத்தும் சட்டசபை பொதுத்தேர்தல் தேதியை குறிப்பிட்ட ஸ்டிக்கர்கள் மூலம் மறைத்தும் வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் என ஸ்டிக்கர் ஒட்டியும் தயார் செய்தனர்.
மேலும், இந்த வாகனத்தில் தேர்தல் விழிப்புணர்வு எல்.இ.டி., திரை மூலம் ஒளிபரப்பு செய்தும், மாவட்டம் முழுதும் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மேலும்
-
15ல் நடத்தை விதி அமல் இப்பதா புகார் வந்துச்சி பேனர துாக்கிட்டோம்
-
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளியா? 'ஹூம்' சொல்லுங்க... அலுவலர் வருவாங்க...
-
வேம்படிதாளம் ரயில் சுரங்கப்பாதைக்கு தீர்வில்லை
-
வாய்க்காலில் அடைத்துள்ள கழிவுகளை அகற்ற கோரிக்கை
-
போலீசாரை தடுத்த டிரைவருக்கு காப்பு
-
கட்டளை - மாயனுார் சாலை சேதம் வாகன ஓட்டிகள் பெரும் அவதி