வாய்க்காலில் அடைத்துள்ள கழிவுகளை அகற்ற கோரிக்கை
கரூர்: கரூர், இரட்டை வாய்க்காலில் குவிந்துள்ள குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலாக ஒரு காலத்தில் இருந்த இரட்டை வாய்க்கால், கரூர் நகரில், 12 கிலோ மீட்டர் வரை செல்கிறது. அதில், தற்போது சாக்கடை கழிவு கலந்து செல்கிறது. ரத்தினம் சாலை முதல், மக்கள் பாதை வரை, வாய்க்காலில் கான்-கிரீட் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இரட்டை வாய்க்காலில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால், இரவு நேரத்தில் வாய்க்கால் பகு-தியில் வசிக்கும் பொதுமக்கள் துாங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும், வாய்க்காலில் துர்நாற்றம் வீசுவதால், தொற்றுநோய் அபாயமும் உள்ளது. எனவே, கரூரில் இரட்டை வாய்க்காலில் தேங்கியுள்ள குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை, கரூர் மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டியது அவசியம்.
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார்?
-
தேர்தலுக்கு இன்னும் 25 நாள்…. இன்றைய (மார்ச் 29) தினமலர் தேர்தல் களம்!
-
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; திருவிக நகர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி
-
மேயர் பிரியா மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம்; உழைப்புக்கு மரியாதை இல்லை என புலம்பல்
-
முதல்வர் திறந்து வைத்த தங்கும் விடுதிக்கு உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி இல்லை; மின் இணைப்பு பெற முடியாமல் கோயில் நிர்வாகம் தவிப்பு
-
அன்பழகன் பேரனுக்கு வாய்ப்பு மறுப்பு