கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது
பேரூர்: பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எஸ்.ஐ., வினோத் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ராமசெட்டிபாளையம் பகுதியில் செல்லும் போது, வீட்டின் முன் நின்று கொண்டிருந்த மூன்று வாலிபர்கள், போலீசாரை கண்டதும் ஓடினர்.
சந்தேகமடைந்த போலீசார், அவர்களை துரத்தி பிடித்து சோதனை செய்தனர். விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் செல்வபுரம் சரவணன், 24, சுண்டக்காமுத்தூர் விக்னேஷ், 22, ஹரி ராகவேந்திரன், 22 என்பது தெரிந்தது. பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர். 2.4 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்
Advertisement
Advertisement