2 வார்டில் பெயர் இருந்தால் உடனே தகவல் தாருங்கள்
பெங்களூரு: 'ஒரு வாக்காளரின் பெயர் தவறுதலாக இரண்டு வார்டுகளில் இடம் பெற்றிருந்தால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்' என ஜி.பி.ஏ., தெரிவித்து உள்ளது.
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜி.பி.ஏ., தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், ஆட்சேபனை தெரிவிக்க வரும் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலை ஜி.பி.ஏ., இணையதளத்தில் வாக்காளர்கள் சரிபார்த்து கொள்ளலாம்.
தங்கள் பெயர் இரண்டு வார்டுகளில் இடம்பெற்றிருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பெயரே இல்லாத வாக்காளர்களும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படும். நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்
Advertisement
Advertisement