அ.தி.மு.க., சம்பத்திற்கு வரவேற்பு 

கடலுார்: அ.தி.மு.க., கடலுார் சட்டசபை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பத்துக்கு நேற்று கடலுார் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை, அம்பேத்கர் சிலை, பெரியார் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார், கடலுார் வடக்கு ஒன்றிய செயலாளர் அழகானந்தம், தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாவட்ட துணை செயலாளர் தெய்வ பக்கிரி, கடலுார் மாநகர பகுதி கழக செயலாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், மாதவன், கந்தன், வினோத் ராஜ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரித்விராஜ், இளைஞர் அணி திரு, மகளிர் அணி சாந்தி, மீனவர் அணி குப்புராஜ், தமிழ்செல்வன், இலக்கிய அணி ஏழுமலை, கடலுார் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement