சிவகங்கை மாவட்டத்தில் 5 பேர் மனு தாக்கல்

சிவகங்கை:மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதியில் நேற்று முதல் நாளில் நாம் தமிழர் கட்சி, த.வெ.க., உட்பட 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேவகோட்டையில் சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி கயல்விழி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சிவகங்கையில் கோட்டாட்சியர் ஜெபி கிரேசியாவிடம்,வேட்பாளர் இந்துஜாவும், திருப்புத்துாரில் தேர்தல் அலுவலர் சிவபாலனிடம் வேட்பாளர் ரம்யா மோகன், மானாமதுரையில் தேர்தல் அலுவலர் ராஜாசிங்கிடம் வேட்பாளர் சண்முகப்பிரியா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். *காரைக்குடி தொகுதி த.வெ.க., வேட்பாளர் டாக்டர் பிரபு தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Advertisement