தேர்தல் சின்னங்களே இல்லாத கிராமங்கள்
வடமதுரை:வடமதுரை ஒன்றியத்தில் பல கிராமங்களில் ஓட்டுச்சாவடிகள் ஊர் மத்தியில் இருப்பதால் தேர்தல் சின்னங்கள் வரையப்படாமல் சுவர் 'பளிச்' என உள்ளன.
தேர்தல் நடைமுறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சின்னம் வரைய, போஸ்டர் ஒட்ட அனுமதிக்கப்படுவதில்லை. கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்படுகின்றன.ஆனால் ஊரகப் பகுதிகளில் மட்டும் சின்னங்கள் வரைய அனுமதிக்கப்படுகிறது. இதிலும் ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டர் துாரம் வரை சின்னம் வரைய, போஸ்டர் ஒட்ட அனுமதியில்லை.
கிராமங்களில் பெரும்பாலும் தேர்தல் ஓட்டுச்சாவடியான பள்ளி கட்டடம் ஊர் மையத்தில் இருக்கும். இதனால் பல கிராமங்களில் சின்னம் வரைய முடியாத நிலை உள்ளது.இதுபோல் வடமதுரை ஒன்றிய கிராமங்களில் ஓட்டுச்சாவடிகள் ஊர் மத்தியில் உள்ளதால் தேர்தல் சின்னம் எதுவும் வரையப்படாமல் சுவர் 'பளிச்' என காணப்படுகின்றன.
மேலும்
-
பவுஞ்சூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுவது எப்போது ?
-
சிலிக்கான் மண் எடுக்க தடை விதிக்க கோரி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
-
தனியார் பஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
இணைப்பு சாலையில் ஓட்டுநர்கள் அடாவடி: வாகன ஓட்டிகள் அவதி
-
ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விட்ட கும்மிடி., அ.தி.மு.க., வேட்பாளர்
-
திருவள்ளூர் மாவட்டம் இனிதாக