சிறுவன் மூளைச்சாவு: 5 பேருக்கு வாழ்வு

மதுரை: மதுரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் யாககண்ணன் 16. வீட்டின் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் தலை, முதுகுத்தண்டில் காயம்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஏப். 5 காலை மூளைச்சாவு நிலையை அடைந்தார். மகனது உடல் உறுப்புகளை தானமாக தர தந்தை முன்வந்தார்.

சிறுவனின் கல்லீரல் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஒரு சிறுநீரகம் கோவை மெடிக்கல் சென்டருக்கும் மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலி கிட்னி கேர் சென்டருக்கும் அனுப்பப்பட்டன. கருவிழிகள், தோல் எடுக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.

Advertisement