அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கோவை: அம்பேத்கர் 136வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் வெங்கிட்டாபுரம், ஆவாரம்பாளையம் கரட்டுமேடு, தொண்டாமுத்துார், கரையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநகராட்சி 43-வது வார்டு வெங்கிட்டாபுரம் பகுதியில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில், மாவட்டச் செயலாளர் அசரப் அலி தலைமையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் இயக்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் புருஷோத்தமன் பேசுகையில், ''அம்பேத்கர், இந்த தேசம் சிதைந்து விடாமல் இருப்பதற்கு, நிலையான அரசியல் சட்டம் கொடுத்துள்ளார். அவரையும் அவரது சிந்தனைகளையும் மக்கள் மறந்துவிடக்கூடாது,'' என்றார்

Advertisement