பெண் துாக்கிட்டு தற்கொலை

படப்பை: படப்பை அடுத்த வரதராஜபுரம், பெரியார் நகரைச் சேர்ந்த சதீஷ் மனைவி வசந்தி, 48. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வசந்தி இன்சூரன்ஸ் ஏஜன்ட்டாகவும், பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தும் வந்துள்ளார்.

இந்த நிலையில், கல்லுாரிக்கு சென்ற அவரது மகன், நேற்று மாலை வீட்டிற்கு வந்தபோது, வசந்தி வீட்டில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement