டெபாசிட் பணத்தை மறந்துட்டு மனுதாக்கலுக்கு வந்த சுயேட்சை

காங்கேயம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம், ஊதியூர் அருகே எல்லப்பாளையம்புதுாரை சேர்ந்தவர் லோகநாதன். உழைப்பாளி மக்கள் கட்சி தலைவர். காங்கேயம் சட்டசபை தொகுதியில் போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்ய, காங்கேயம் தாசில்தார் அலுவலகத்துக்கு, நேற்று மதியம், 2:59 மணிக்கு வந்தார். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆவணங்களை தந்தவர்,

டெபாசிட் பணம், 10 ஆயிரம் ரூபாய் கட்ட, பாக்கெட்டை பார்த்தபோதுதான், பணத்தை மறந்துவிட்டு வந்தது தெரிந்தது. அதற்குள், 3:00 மணியாகி விட்டதால், மனுதாக்கல் நேரமும் முடிந்து விட்டிருந்தது. ஆக, இந்த தேர்தலில் போட்டியிட முடியாத சோகத்தில் லோகநாதன் திரும்பி சென்றார்.

Advertisement