ஜோசப் இருவர்; விஜய் இருவர்; பெரம்பூரில் நடிகர் விஜய்க்கு எதிராக போட்டி
நமது நிருபர்
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக எம்.ஜோசப், எஸ்.ஜோசப், கே.விஜய், ஜி.விஜய் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட மொத்தம் 14,700 வேட்பு மனுக்கள் தாக்கலாகி இருக்கின்றன. இன்று (ஏப்ரல் 07) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடந்து வருகிறது. பெரம்பூர் தொகுதியில் விஜய் பெயரில் சொத்து வரி செலுத்தப்படவில்லை எனக் கூறி பாமக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது பரிசீலனையில் இருக்கிறது. மாலைக்குள் வேட்புமனு ஏற்கப்படும் என தெரிகிறது. இந்த தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தம் 66 பேர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
பொதுவாக விஐபி தொகுதி வேட்பு மனு தாக்கலில் ஏதாவது சுவாரஸ்யம் இருக்கும். அப்படி தான், விஜய் இறங்குவதால் தேசிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளிலும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.
பெரம்பூரை பொறுத்தவரை மொத்தம் 66 வேட்பு மனுக்கள் தாக்கலாகி இருக்கின்றன. தவெக தலைவர், ஜோசப் விஜய் என்ற பெயரில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து ஜோசப் என்ற பெயரில் 2 பேரும், விஜய் என்ற பெயரில் வேறு 2 பேரும் போட்டியிடுகின்றனர். அதாவது, விஜய் பெயரிலேயே அவரை எதிர்த்து 4 பேர் களம் இறங்கி உள்ளனர்.
அதாவது எம்.ஜோசப், எஸ்.ஜோசப், கே.விஜய், ஜி.விஜய் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்களை களம் இறங்கி உள்ளனர் என்று சொல்வதை விட களம் இறக்கி விடப்பட்டுள்ளனர் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
பொதுவாக நட்சத்திர வேட்பாளரை வீழ்த்த, அவர் பெயரிலேயே கட்சிகள் நிறைய பேரை சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய வைப்பது வாடிக்கையாக இருக்கிறது. ஓட்டு பெட்டியில் ஜோசப் விஜய், விஜய், ஜோசப் என பெயர்கள் மாறி மாறி வரும் போது, ஒரிஜினல் விஜய் யார் என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டு விடும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.
தீயாய் சிந்திக்கிறார்கள்.
இப்படித்தான் நரி தந்திர வேலை சதி வேலைகள் செய்வார்கள் மக்களே சின்னத்தைப் பார்த்து ஓட்டளியுங்கள் பெயரை பார்க்காதீர்கள்
கேடுகெட்ட திருட்டு திமுகாவின் ஈனபுத்தி நன்றாக தெரிகிறது
ரொம்ப தெளிவா சரியான விஜய்க்குத்தான் ஓட்டு விழும். உங்க சல்லித்தனம் எல்லாம் விஜய்கிட்ட நடக்காது .
இதனால் தான் திருட்டு திராவிடம் என்று கூருகிறார்கள். திரு பன்னீர்செல்வம் ராமேஸ்வரம் தொகுதியில் நின்ற போது ஐந்து பன்னீர்செல்வம் என்ற பெயருடையவர்களை களத்தில் சத்தமே இல்லாமல் இறக்கினார்கள். இது இவர்களுடைய அரசியல் பாணி. அதை அடுத்தவர்கள் செய்யாததால் இவர்கள் மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அந்த காலத்தில் கருணா ஆரம்பித்து வைத்த மிக மலிவான யுத்தி..
அந்த காலத்தில் கருணா ஆரம்பித்து வைத்த மிக மலிவான யுத்தி....
அப்போர் இப்போது உள்ள வருக்கு சொந்த சிந்தனை கிடையாதுன்னு சொல்ல வறீங்க்ளா?மேலும்
-
தனியார் பஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
இணைப்பு சாலையில் ஓட்டுநர்கள் அடாவடி: வாகன ஓட்டிகள் அவதி
-
ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விட்ட கும்மிடி., அ.தி.மு.க., வேட்பாளர்
-
திருவள்ளூர் மாவட்டம் இனிதாக
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச 'நீட்' தேர்வு பயிற்சி
-
மகளிருக்கு மீண்டும் தாலிக்கு தங்கம் :அ.தி.மு.க., வேட்பாளர் அரி வாக்குறுதி