தேர்தல் அதிகாரிகள் சோதனை; ரூ. 1.40 லட்சம் பறிமுதல்

உடுமலை: மடத்துக்குளத்தில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட, ரூ.1.40 லட்சத்தை நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மடத்துக்குளம் சட்டசபை தொகுதி, மைவாடி பைபாஸ் ரோட்டில், நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் சுப்புலட்சுமி தலைமையிலான அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

அப்போது, அதே பகுதியைச்சேர்ந்த பிரசாந்த், உரிய ஆவணங்கள் இல்லாமல், ஜீப்பில் கொண்டு வந்த, 1.40 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷிடம் ஒப்படைத்தனர்.

மடத்துக்குளம் சார்நிலைக்கருவூலத்தில், பறிமுதல் செய்யப்பட்ட தொகை பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

Advertisement