வாக்காளர்களை அடையாளம் காணும் வழிமுறைகள்

ஊட்டி: மாநிலத்தில் வரும், 23ல் நடக்கும் சட்டசபை பொதுத் தேர்தலில் வாக்காளர்களை அடையாளம் காணும் செயல் முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

வாக்காளர்கள் தங்களது ஓட்டுரிமையை சுதந்திரமாக, தேவையான ஆவணங்களுடன் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களான, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள், மருத்துவ காப்பீடு அட்டை, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டை, டிரைவர் லைசென்ஸ், பான் கார்டு பயன்படுத்தலாம்.

மேலும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளர் வழங்கப்பட்ட திறன் அட்டை, பாஸ்போர்ட், புகை படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், சட்டசபை தேர்தலில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, மற்றும் தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் ஓட்டளிக்கும் நாளில் ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு வருவது கட்டாயம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement