பைக் மீது லாரி மோதியது;லாரி டிரைவர் சிக்கினார்

புதுடில்லி:அவுட்டர் டில்லியில், வேகமாக சென்ற லாரி, பைக் மீது மோதியதில், பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார். தப்பியோடிய லாரி டிரைவரை அந்த பகுதி மக்கள், பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

பஸ்சிம் விஹார் கிழக்கு போலீசாருக்கு, பஞ்சாபி பாக் - பீர்கார்ஹி சவுக் பகுதியில் நேற்று காலை வேகமாக சென்ற லாரி மோதி, பைக்கில் சென்ற நபர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது.

அந்த இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்கு பதிவு செய்து, இறந்து கிடந்த நபர், பீராகார்ஹி சவுக் என்ற பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மோகன், 19, என்பதை அறிந்தனர். அப்போது, அவர் சென்ற வாகனம் மீது மோதி நிற்காமல் சென்ற லாரியை மடக்கி பிடித்த இளைஞர்கள் சிலர், அந்த லாரியின் டிரைவர் சவுரவ்குமார், 26, என்பவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement