சபரிமலை வழிபாட்டு விவகாரம் நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
- டில்லி சிறப்பு நிருபர் -
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரும் விவகாரத்தில், தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறைகளுக்கு ஆதரவாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டுள்ளது. குறிப்பாக மத நம்பிக்கைகள், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு அப்பாற்பட்டவை என விளக்கம் அளித்துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது சபரிமலை அய்யப்பன் கோவில். 48 நாள் பிரம்மச்சரிய விரதம் இருந்து, இருமுடி கட்டியே இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது விரத நியமங்களாக வகுக்கப்பட்டுள்ளது.
தனித்துவ பண்புகள்
தவிர 10 வயதுக்குட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சபரிமலை அய்யப்பனை தரிசிக்கலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில், இந்த வழிபாட்டு முறை பாலின சமத்துவத்துக்கும், மத சுதந்திரத்திற்கும் எதிராக இருப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த, 2018ல் இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கலாம்' என, உத்தர விட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2019ல் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான, ஐந்து பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, வழக்கை 9 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.
இதையடுத்து, இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ஒன்பது பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை எதிர்த்து, அவர் முன்வைத்த வாதம்:
நம் நாட்டில் பிரதானமாக ஒரு மதம் மட்டுமே இல்லை. ஒவ்வொரு மதத்திற்கும் தனித்துவ பண்புகள் இருக்கின்றன. மத நம்பிக்கையை பகுத்தறிவு அல்லது அறிவியல் அடிப்படையில் ஆராய கூடாது.
அறிவியலால் விளக்க முடியாத சர்வ வல்லமை படைத்த ஒரு சக்தியின் மீது பலர் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.
கால அவகாசம்
அதேசமயம், நரபலி அத்தியாவசியமான மத சடங்கு, அடிப்படை உரிமை என கூறி ஒருவர் நீதிமன்றத்தை அணுகினால், அதை மத நம்பிக்கையின் அடிப்படையில் ஆராய வேண்டிய அவசியமே இல்லை. சட்டவிரோதமானது எனக் கூறி அப்படியே நிராகரிக்கலாம்.
சபரிமலை விவகாரம் என்பது மத நம்பிக்கை மற்றும் குறிப்பிட்ட பிரிவினரின் தன்னாட்சி அதிகாரம் கொண்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
ஒரு மசூதிக்கோ, குருத்வாராவுக்கோ செல்லும்போது தலையை மூடியபடி செல்ல வேண்டும். அந்த நடைமுறையை தனிநபர் சுதந்திர பறிப்பு என கூற முடியாது.
அரசியல் சாசனத்தில் அறநெறி என்ற சொல் மதம் சார்ந்த ஒழுக்கத்தையே குறிக்கிறது. அதை விரிவுபடுத்தி, 'அரசியல் சாசன அறநெறி' என மாற்றுவது நீதித்துறை மீறல் மட்டுமின்றி, அரசியல்சாசன திருத்தத்திற்கு ஒப்பானது.
மதக் கோட்பாடுகளில் நீதித்துறை தலையிட முயல்வது சில நேரங்களில் ஆபத்தானது. ஏனெனில் சம்பந்தப்பட்ட மதம் சார்ந்த விஷயங்களில் நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களிடமோ, அதன் புனித நுால்களிலோ, குறிப்புகளில் இருப்பதையோ நீதிமன்றம் ஆராய்வதில்லை. எனவே, மத நம்பிக்கைகள் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு அப்பாற்பட்டவை. இவ்வாறு அவர் வாதாடினார்.
இதைத் தொடர்ந்து, 'எதிர்தரப்பினர் தங்கள் வாதங்களை விரைவில் முடிக்க வேண்டும், கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது' எனக்கூறி, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 22ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
@quote@சபரிமலை கோவில் வழிபாட்டுக்கும்,பெண்களின் மாதவிடாய்க்கும் சம்பந்தம் இல்லை.
நாடு முழுதும் அய்யப்பன் கோவில் இருக்கிறது. அங்கெல்லாம் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், சபரிமலையில் அய்யப்பன் நைஷ்டிக பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதால், குறிப்பிட்ட வயது உடைய பெண்களுக்கு அனுமதி தரப்படுவதில்லை. இது சட்டத்தில் வகைபடுத்த முடியாத வழக்கு.
- துஷார் மேத்தா சொலிசிட்டர் ஜெனரல்quote
@block_B@ 7 கேள்விகள்
உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சபரிமலை விவகாரம் மட்டுமின்றி, மத சுதந்திரத்தின் வரம்புகள் என்ன? தனிநபர் மத உரிமைக்கும், ஒரு மதப் பிரிவின் கூட்டு உரிமைக்கும் உள்ள தொடர்பு, மதப் பிரிவுகளின் உரிமைகள், 'அறநெறி' என்பதில் 'அரசியல்சாசன அறநெறி' அடங்குமா? ஹிந்துக்களின் ஒரு பிரிவு என்பதின் பொருள் என்ன? மாற்று மதத்தை சார்ந்தவர், பொதுநல வழக்கு மூலம் ஹிந்து மத நடைமுறைகளை எதிர்க்க முடியுமா? உள்ளிட்ட ஏழு கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. block_B
முதலில் இந்த வழக்கை தொடர்ந்தவர் ஒரு முஸ்லீம். அவர் தனது மதத்தில் உள்ள பிரச்னை மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இதேபோல் ஒரு வழக்கு இஸ்லாம் பெண்கள் எல்லா காலத்தில் உம் மசூதி இல் அனுமதி க்க பட வேண்டும் ன்னு ஒரு ஹிந்து வழக்கு தாக்கல் செய்தார். மகாராஷ்டிரா உயர் நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. காரணம் கூறியது. பிற மதத்தில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை என்று
இந்த நாட்டில் கோயில்கள் பெயரால் பெண்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் இழிவு படுத்துகின்றனர்.
தெய்வம் எல்லோர் உள்ளேயும் உள்ளது அது மாத விளக்கு காலங்களிலும் உள்ளது.
பெருமையனாகிலும் எம் இறைவனே சிறுமையுள் உட்கலந்து அங்குளன் என்ற திருமூலரின் கூற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
மத நம்பிக்கைகள் நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டவை என்பது மத்திய அரசின் 100 சதவீதம் சரியான வாதம். பாலின சமத்துவம், மத சுதந்திரம் எதிர் என்று ஶ்ரீ ஐயப்பன் கோவிலை மட்டும் குறிப்பிட்டு வழக்கு ஏன்? பிற மத வழிபாட்டு இடத்தில் சமத்துவம் இருக்கா? அப்படியென்றால் மனு தாக்கல் நோக்கம் மத கலவரம் உண்டு பண்ண தான். அவரை சிறை படுத்தாமல் தவறான மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிப்பது முறையா? மத நம்பிக்கை பகுத்தறிவு அல்லது அறிவியல் அடிப்படையில் ஆராய கூடாது என்பது தெளிவான விளக்கம். மனித சக்திக்கு அப்பாற்பட்டது தெய்வ சக்தி. நீதிமன்றம் தன் அதிகாரம் கீழ் அனைத்தையும் கொண்டு வர விரும்புகிறது . இது முற்று பெற வேண்டும்.
அரசியலமைப்புச்சட்டத்திலோ அல்லது இ பி கோ விலோ இந்துமதத்தின் பாரம்பரியம் சொல்லப்படவில்லை. ஆகவே இதில் நீதிமன்றம் தலையிடுவது தேவையற்றது. நம்பிக்கை என்பது வேறுபடும் - அதை நீதிமன்றம் கேள்வி கேட்கமுடியாது.மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை