நல்லாங்குடி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு

தேவகோட்டை;தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

தேவகோட்டையில் மண் வேலை செய்யும் மக்கள் குதிரை, மாடு பொம்மைகளை செய்தனர். அப்பகுதியில் உள்ள மகமாயி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து குதிரைகளுக்கும் பூஜை செய்து அங்கிருந்து தேவகோட்டை இறகுசேரி, நல்லாங்குடி உள்ளிட்ட கிராமத்தினர் நேர்த்திக்கடனாக புரவிகளை சுமந்து நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயிலை அடைந்தனர் . விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த நெல்லை ஓலை பெட்டிகளில் எடுத்து வந்து மண் குதிரை காலடியில் கொட்டி வணங்கினர்.

Advertisement