மனைவி மாயம் :கணவன் புகார்

விழுப்புரம்: மனைவியை காணவில்லை என கணவன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

விழுப்புரம் அடுத்த கோலியனுாரை சேர்ந்தவர் அழகுவேல் மனைவி பார்வதி, 25; கடந்த 7ம் தேதி விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தில் தனது மொபட்டை நிறுத்திவிட்டு வெளியில் சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

அழகுவேல் கொடுத்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement