கருத்தரங்கு

மதுரை: மதுரை மங்கையர்கரசி கல்வியியல் கல்லுாரியில் 'குழந்தை உரிமை சட்டங்கள், கொள்கைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. செயலாளர் அசோக்குமார், இயக்குனர் சக்திபிரனேஷ் தலைமை வகித்தனர்.

முதல்வர் ஆரோக்கிய பிரெசில்லா முன்னிலை வகித்தார். மாணவிகள் ராஜராஜேஸ்வரி, பரணி தொகுத்து வழங்கினர். குழந்தைகள் நலக்குழுத் தலைவர் பிரேமலதா பேசுகையில், குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு, உரிமைகள், போக்சோ, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் தடைச் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். மாணவி சுகப்பிரியா நன்றி கூறினார்.

Advertisement