மாணவ பேரவை நிறைவு விழா

மதுரை: மதுரை லேடிடோக் கல்லுாரியில் மாணவ பேரவை நிறைவு விழா, கல்லுாரி நாள் விழா நடந்தது. துணை முதல்வர் நிம்மா எலிசபெத் வரவேற்றார். முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ ஆண்டறிக்கை வாசித்தார்.

நெல்லை செயின்ட் சேவியர் கல்லுாரி முதல்வர் காட்வின் ரூபஸ் பேசுகையில், இது தேர்தல் காலம். சரியான தலைவர்களை தேர்வு செய்வது நமது கடமை. அரசியலில் பெண் தலைவர்கள் இல்லை. அதற்கான காரணத்தை சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தில் பல துறைகளில் சாதனை பெண்களாக நீங்கள் உருவாக வேண்டும் என்றார்.

சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்கள், அலுவலர்கள், பணிநிறைவு பெற்றோர் கவுரவிக்கப்பட்டனர். பேராசிரியர் ஜெஸி ரஞ்சிதா ஜெபசெல்வி ஏற்புரையாற்றினார். புதிய பேரவை பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். பேரவை தலைவர் பர்ஹானா நன்றி கூறினார்.

Advertisement