சவுக்கு சங்கர் மீண்டும் கைது
-நமது நிருபர்-
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழக அரசு நிர்வாகத்தில் நடந்த ஊழல் முறைகேடுகள், அமைச்சர்கள், அதிகாரிகளின் தவறு பற்றி வெளிப்படையாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வந்தார்.
இது, அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், 'பெண் போலீசாரை அவதுாறு செய்தார்' என்று குற்றம் சாட்டி, போலீசார் அவரை 2024ல் கைது செய்தனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரை ஜாமினில் விடுவித்தது. பழையபடி அவர், யூடியூப் சேனலில் பேட்டி அளித்து வந்தார்.
இந்நிலையில், 'கஞ்சா வைத்திருந்தார்' என்பது உட்பட வேறு சில வழக்குகளில் அவர் 2024 டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.
மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிமன்றம், வழக்கு தொடர்பாக பேட்டி அளிக்கக்கூடாது; வழக்கில் தொடர்புடைய நபர்களை சந்திக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தது.
எனினும் அவர் ஜாமின் நிபந்தனைகளை மீறி வருவதாக போலீசார் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். வழக்கில் அவரை கைது செய்வதற்கும் போலீசார் தேடி வந்தனர். அவரது எக்ஸ் (டுவிட்டர்) கணக்கை முடக்கவும், இன்டர்நெட் ஐ.பி., முகவரியை கேட்டும், சென்னை போலீசார், எக்ஸ் சமூக வலைதளத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இந்நிலையில், ஆந்திராவில் இருந்த சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், ஒரு யூடியூபரை தேடிச்சென்று ஆந்திராவில் போலீசார் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.
அர ளும் கட்சிகளுக்கு உண்மை சொல்பவர்களெல்லாம் பேய் போல காட்சியாகிறார்கள்.
தேர்தல் நேரத்தில் இது தேவை இல்லாத கைது!
நீதிமன்றம் பேசக்கூடாது என கூறிய பிறகும் அடுத்த மாநிலத்தில் ஒளித்து கொண்டு பேசினால் இப்படி தான் நடக்கும்
பேச்சு உரிமை, சமூகநீதி, பாசிசம், பாயாசம்
காவல் துறை இப்போது யார் கன்ட்ரோலில் உள்ளது. விஜய்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்று சொன்னபோது தேர்தல் கமிஷன் தான் பொறுப்பு என டீம்கா மந்திரி சொன்னாரே
தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இருக்கிறதா? ஸ்டாலின் அரசின் அதிகார வர்க்கம் இன்னும் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த தேர்தல் நேரத்தில் யூடியூப் முழுவதும் ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கான சானெல்களில் தி மு க அரசை காரித்துப்பும் வீடியோக்கள் வருகிறது. சவுக்கு சங்கரை மட்டும் குறிவைப்பதற்கு காரணம் என்ன? அவரை கைது செய்தால் மட்டும் தி மு க வெற்றிபெறுமா? பா ஜா க 2026 இல் தமிழகத்தில் கால் ஊன்றுவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். இன்று உலகமே உள்ளங்கையில் உள்ளது. தமிழக மக்களும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள் நிமிடத்திற்கு நிமிடம். ஆணவத்தில் அழிந்த தி மு க என்று தமிழகம் பேசும் காலம் வெகு விரைவில் வரும். 2026 இல் தி மு க விட்கு தோல்வி உறுதி என்று இதன் மூலம் தெரிகிறது
கேவல தீமுக ஏவலாளிகள் செய்யும் அராஜகத்தை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்ற பயமே இல்லாம அராஜகம் கட்டவிழ்த்து விட படுகிறது . எல்லாத்துக்கும் மே 4 பதில் கிடைக்கும் .
அராஜக அரசை எதிர்க்க சவுக்கு சங்கர் போல் பத்துபேர் உருவாக வேண்டும்.
இதுவே அன்னா திமுக ஆட்சியாக இருந்திருந்தால் ஹிந்து ராம் கோர்ட்டில் வாதாடி இருப்பார். மேலும் தற்போது எதிரிக்கட்சிகள் இந்த கைதை எதிர்த்து அரசியல் ஆக்க வேண்டும். ஸ்டாலின் எதிர் கட்சியில் இருந்திருந்தால் உலகமே போய் விட்டது என்று கூத்தாடி இருப்பார். எல்லா மாவட்ட தலை நகரங்களிலும் இந்த கைதை வைத்து பொது கூட்டம் போட்டு இருப்பார்.மேலும்
-
ஆனைமலையில் கொப்பரை ஏலம்
-
கோவிலில் எழுந்தருளியுள்ள சுவாமிகளுக்கு நித்திய பூஜை
-
அரங்கநாதர் கோவில் உண்டியலில் ரூ. 29 லட்சம் காணிக்கை
-
பிரச்சார யுக்தி மாறினாலும் கிராமங்களில் 'கெத்து' காட்டும் சுவர் விளம்பரம்
-
கக்கராயன் மலை குகையில் சிறுத்தை வனத்துறை மெத்தனம்! நள்ளிரவு வேட்டையால் மக்கள் அச்சம்
-
தி.மு.க. அரசு எங்களை கண்டுக்கவே இல்லை :சின்னவேடம்பட்டி 'இண்டஸ்ட்ரியல் அசோசியேஷன்' குற்றச்சாட்டு