பூவோடு... எடுத்து வந்தோம் ;வேண்டுதல் நிறைவேற்றும் பக்தர்கள்
உடுமலை: உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழாவின் போது மாவிளக்கு, பூவோடு எடுத்து, உருவாரங்கள் வைத்து, வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.
உடுமலையின் காவல் தெய்வமாக போற்றப்படும் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும், நோன்பு சாட்டியதும், பக்தர்கள் பல்வேறு வழிகளில், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
நோய்களில் இருந்து தன்னை காத்தருளிய அம்மனுக்கு, பச்சரிசியில் மாவிட்டு, விளக்கேற்றி, மனமுருக வேண்டி மாவிளக்கு படைக்கின்றனர். இதே போல், நெருப்பில், அம்மன் வெளிவந்தவள் என்பதை நினைவூட்டும் விதமாக, பூவோடு எடுக்கின்றனர்.
விவசாய பூமியில், செழிப்புக்கு காரணமான இறைவனுக்கு, அத்தகைய பசுமை செழிப்பையே அர்ப்பணிப்பது போல, அம்மன் திருவடிகளில், சமர்ப்பிக்கும் வகையில், முளைப்பாலிகையிட்டு ஊர்வலமாக எடுத்து வருகின்றனர்.
திருவிழாவின் போது, உப்பிடுவது எதிலிருந்து தோன்றியதோ, அதிலேயே கரைவது என்பதை வலியுறுத்தும் தத்துவமேயாகும்.
வேண்டுதலுக்கு ஏற்ப உருவார மண் பொம்மைகளை அர்ப்பணித்து, வேண்டிய வரம் கிடைக்கவும், வேண்டுதல் நிறைவேறியதற்காகவும், மனதார வழிபாடு செய்கின்றனர்.
மேலும்
-
ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
-
'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
-
மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்
-
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்
-
35 கட்சிகளை தனியே த.வெ.க., எதிர்க்கிறது
-
ஒருபோதும் காசு, பதவிக்காக நான் தடம் மாற மாட்டேன்: நடிகர் ராமராஜன் விளக்கம்