கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்

சிவகங்கை தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் போட்டியிடுகிறார்.

கருணாஸ் வெளியூர் நபர் என்பதாலும், திருவாடானையில் வென்றபோது ஒன்றும் செய்யவில்லை என்ற அதிருப்தி நிலவுவதாலும், கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு தரவில்லை என தி.மு.க., தலைமைக்கு புகார் சென்றது.

முதல்வரின் மருமகன் சபரீசன், நிர்வாகிகளிடம் பேசிய பின்னரும் தொய்வு தொடர்ந்தது. அதனால், திருப்புத்துார் சென்ற முதல்வர் ஸ்டாலின், பரமக்குடி செல்லும் வழியில் சிவகங்கையில்'ரோடு ஷோ' நடத்தி பிரசாரம் செய்தார். அதன்பின்னரும் தி.மு.க., கூட்டணி நிர்வாகிகள் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை.

இதனால் அதிருப்தியான தி.மு.க., தலைமை, 'கட்சியில் ஒன்றிய செயலர்களுக்கான தேர்தல் ஜூன் மாதம் நடக்க உள்ளது. ஒழுங்காக வேலை செய்யாதோர் ஓரங்கட்டப்படுவீர்கள்' என எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் தி.மு.க.,வினர் களமிறங்காமல் உள்ளனர்.

Advertisement