'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து யார் பேசினாலும், அவர்களை கிண்டலடிக்கும் வகையில் சபாநாயகர் அப்பாவு பேசுவதுடன், அமைச்சர்கள் கூற வேண்டிய பதிலையும் அவரே கூறி விடுவார். மேலும், ஆளும்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஏதேனும் குற்றச்சாட்டுகளை சுமத்தினால், அவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக அறிவிப்பார்.
அவர் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது, அவரை இளைஞர்கள் கலாய்த்து அனுப்பி உள்ளனர். ராதாபுரம் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் அப்பாவு, தனது தொகுதிக்குட்பட்ட ஆவரைகுளம் மற்றும் அம்பலவாணபுரத்தில் ஓட்டு சேகரிக்க சென்றார்.
அங்கு மக்களிடம் பேசும்போது, கடந்த தேர்தலில், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறினார். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: நான் ஓட்டு கேட்கிறேன். தாய்மார்கள் கேட்க தயாராக உள்ளனர். சிலர் குழப்பம் விளைவிக்க நினைக்கிறாங்க. அவர்கள் யார் என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.
குழப்பவாதிகள் அமைதியாக இருங்கள். நீங்கள் ஓட்டு போட்டால் போடுங்கள். போடாவிட்டால் போங்கள். அது உங்கள் விருப்பம்.
ஆனால், நான் ஓட்டு கேட்கக் கூடாது, பிரசாரம் செய்யக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமை இல்லை. தாய்மார்கள் தாமிரபரணி தண்ணீர் கேட்டனர். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு, ஓட்டு கேட்க வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்து அப்பாவு, தனது பேச்சை கேட்க, தாய்மார்கள் தயாராக இருப்பதாக கூறியதும், 'அவர்கள் 200 ரூபாய் வாங்கி உள்ளனர்' என சில இளைஞர்கள் கூற, மற்றொருவர், 'இதை அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' எனக் கூறியவுடன், அங்கு சிரிப்பலை அதிகரித்தது. இதனால் கடுப் பாகி போன அப்பாவு அங்கிருந்து நகர்ந்தார்.
வாசகர் கருத்து (11)
Srinivas kumar J - ,இந்தியா
14 ஏப்,2026 - 16:47 Report Abuse
யார் என்ன சொன்னாலும் திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் கோடி கோடியாக பணம் உள்ளது வாக்குக்கு பணம் தந்து வெல்வார்கள். ஓட்டுக்கு பணம் வாங்கும் அவலம் உள்ளவரை இது தொடரும் 0
0
Reply
Srinivas kumar J - ,இந்தியா
14 ஏப்,2026 - 16:45 Report Abuse
யார் என்ன சொன்னாலும் திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் கோடி கோடியாக பணம் உள்ளது வாக்குக்கு கொடுத்து வெற்றி பெறுவார்கள் ஓட்டுக்கு பணம் வாங்கும் வரை இந்த அவலம் தொடரும் 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
14 ஏப்,2026 - 15:21 Report Abuse
கூட்டத்தில் யாரோ பழனிசாமி என்று குரல் எழுப்பியவுடன் பழக்க தோஷத்தில் அவர் பேசிக்கொண்டிருந்த மைக்கை ஆப் செய்துவிட்டார் எனவும் சொல்லுகிறார்களாம் . 0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
14 ஏப்,2026 - 11:59 Report Abuse
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெற்று, அதே போல் சட்டமன்றத்தையும் நடத்திய கீழ்த்தரமான ஒரு மனிதர் 0
0
Reply
Sridharan - Coimbatore,இந்தியா
14 ஏப்,2026 - 11:11 Report Abuse
நானும் என் வீடு பக்கம் திமுக காரன் யாராவது வருவானா என்று காத்திருக்கிறேன்.வந்தால் ஒரு பிடி பிடிக்கலாம் என்று காத்திருக்கிறேன். ஒருவனும் வர மாட்டேன்கிறார்களே.வர சொல்லுங்க சார்.
செந்தில் பாலாஜி நிற்கும் தொகுதியில் தான் என் வீடு இருக்கிறது.அம்மன் அர்ஜுனன் வெற்றி பெற வாழ்த்துவோம். 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14 ஏப்,2026 - 10:45 Report Abuse
திராவிட மாடல் அரசின் சபாநாயகராக விளங்கிய அப்பாவுக்கு தனது சொந்த தொகுதியில் அபரிமிதமான எதிர்ப்புகள் இவர் முதல்வர் அப்பாவைப்போலவே சபாநாயகர் ஓர் அப்பாவு என்ன பொருத்தமாய்யா
அமைச்சர்கள் பேசுமுன் தானே அமைச்சர்கள்போல பேசுவார் எதிர்கட்சிகார்களை பேசவிடாமல் நையாண்டி செய்து ஏளனம் கிண்டல் செய்வார் குறும்புக்காரர் இவரை லேசாக எடை போடக்கூடாது 0
0
Reply
raja - Cotonou,இந்தியா
14 ஏப்,2026 - 10:16 Report Abuse
சூப்பர் சூப்பர்.. தமிழர்கள் தலை நிமிற்கிரார்கள் ... 0
0
Reply
Ganesh - Chennai,இந்தியா
14 ஏப்,2026 - 09:56 Report Abuse
நானும் என் வீட்டு வாசலில் காத்துகிட்டு இருக்கேன்.. எந்த dmk ஆளுங்களும் ஓட்டு கேட்டு வரமாட்டேங்குறாங்க... 0
0
Reply
Chandru - ,இந்தியா
14 ஏப்,2026 - 09:49 Report Abuse
செல்லுமிடமெல்லாம் செருப்பு 0
0
Reply
நரேந்திர பாரதி - சிட்னி,இந்தியா
14 ஏப்,2026 - 09:25 Report Abuse
என் வீட்டு வாசலில் வந்து கேட்கக்கூடாது என்று சொல்ல எனக்கு உரிமை உண்டு
ஓட்டு போடுன்னு உனக்கு கேக்க உரிமையிருக்குன்னா என்கிட்ட ஓட்டு கேக்காதேன்னு சொல்ல
அவனுக்கு உரிமையில்லையா, Mr.அப்பாவு? ...
விரட்டி அடித்தால் மட்டுமே இது போன்ற இழிவுநிலை மீண்டும் ஏற்படாது என்பதை உங்களை போன்ற அரசியல்வியாதிகளுக்கு புரிந்தால் சரி
அதைத்தான் நாங்களும் சொல்றோம் நீங்கள் கடவுளை வணங்கு வணங்காமல் போங்க
அது போலதான் மும்மொழியும்.. .நாங்க என்ன படிக்க வேண்டும்.... வேண்டாம்னு, நீ எப்படி முடிவு செய்வீங்க...... 0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement