ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
மதுரை செல்லுாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன், 41, டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். உள்ளூரில் நிலவும் சாலை சேதம், குடிநீர் பிரச்னை என பல பிரச்னைகள் குறித்தும் போராடி வருபவர். கடந்த 2021 சட்டசபை, 2022 மாநகராட்சி, 2024 லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது, மதுரை வடக்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
சமூக ஆர்வலராக இருப்பதால், இந்த முறை தனது பிரசாரத்தை வித்தியாசமாக செய்ய நினைத்துள்ளார். அதனால், தத்தனேரி சுடுகாட்டில் உள்ள மயான காளி முன்பு, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுக்கவும், தேர்தலில் தோல்வி அடையவும் சிறப்பு பூஜை செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த பல வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, சங்கரபாண்டியன் கூறியதாவது:
ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல்வாதிகள் முறைகேடாக சம்பாதித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கின்றனர். நான் பலமுறை மனு கொடுத்தும் தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை. மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறேன்.
ஊழல் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுத்து, இந்த தேர்தலோடு அவர்களின் சகாப்தம் முடிய வேண்டும் என மயான காளியிடம் வேண்டியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
ரத்த வாந்தி சிறப்பு பூஜை குறித்து தகவல் அறிந்த போலீசார், சங்கரபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய் வது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (5)
Premanathan S - Cuddalore,இந்தியா
14 ஏப்,2026 - 11:14 Report Abuse
எல்லோரும் இவர் போல்தான் வேண்டுகிறோம்.... ஊழல் செய்தவர்கள் குடும்பம் நன்றாகத்தான் வசதி, வாய்ப்புடன் செழிப்புடன் வாழ்கின்றனர்
கடவுள், தர்மம் , நியாயம் இவையெல்லாம் வெறும் கட்டுக்கதையோ? 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14 ஏப்,2026 - 10:33 Report Abuse
ஜாக்கிரதை இவரை கைது செய்தாலோ அல்லது இவர் மீது ஏதாவது நடவடிக்கைகளை எடுத்தாலோ அதற்கும் அவர் ஒரு பூஜை செய்துள்ளாராம் அதாவது அப்படி நடக்கைகளையெடுக்கும்
அதிபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ரத்த வாந்தி எடுப்பார்களாம் அவரை கைது செய்யத்துணித்தால் அவர்களும் ரத்த வாந்தி எடுப்பார்களாம் ஆதலால் இவரை சற்றே எச்சரிக்கையாகத்தான் கையாளவேண்டும் 0
0
Reply
BALAJI - Coimbatore,இந்தியா
14 ஏப்,2026 - 09:29 Report Abuse
சுடு காட்ல பேய்தான் இருக்கும் இவர் அங்க போனாரு 0
0
Reply
Nandakumar Naidu - ,
14 ஏப்,2026 - 07:35 Report Abuse
அவர் மீது வழக்கு பதிவு செய்ய நினைக்கும் போலீசார் மீது தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
உண்மை தானே தேர்தலுக்கு பணம் கொடுப்பவர்கள் அவ்வாறு தான் சாக வேண்டும். 0
0
Reply
மேலும்
-
கண்டாச்சிபுரத்தை வளர்ச்சி அடைய செய்வேன்: கவுதம சிகாமணி உறுதி
-
படுகரின மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை
-
'டான்டீ' தொழிலாளர்களுக்கு குத்தகை நிலம் போராடி வாங்கி தருவேன்: அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
-
சொன்னால் நிச்சயம் செய்வோம் :காங்., கர்நாடக அமைச்சர் உறுதி
-
சிறுபான்மையினர் தி.மு.க.,வுக்கு ஆதரவு
-
அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Advertisement
Advertisement