சிறுமிக்கு பாலியல் தொல்லை காய்கறி வியாபாரி பிடிபட்டார்
புதுடில்லி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார்.
டில்லி புறநகர் நிஹால் விஹாரில் வசிக்கும் 11 வயது சிறுமி, 4ம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த காய்கறி வியாபாரி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அலறியபடி சிறுமி வீட்டுக்குள் ஓடினார். காய்கறி வியாபாரியும் தப்பி ஓடினார். சிறுமியின் பெற்றோர் நிஹால் விஹார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். சிறுமி வாக்குமூலம் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனர். அந்தப்- பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளியை அடையாளம் கண்டனர். தனிப்படையினர் தீவிரமாக தேடிவந்த நிலையில், லட்சுமி பூங்கா அருகே, தர்மேந்தர்,25, என்ற காய்கறி வியாபாரியை நேற்று கைது செய்தனர்.
சிறுமியிடம் சில்மிஷம் செய்ததை தர்மேந்தர் ஒப்புக்கொண்டார். விசாரணை நடக்கிறது.
மேலும்
-
ஸ்கூட்டி மீது மினி லாரி மோதி மகள் கண்ணெதிரே தாய் உயிரிழப்பு
-
சிலிண்டர், குக்கர், பச்சை மிளகாய்: ராமதாஸ் தரப்புக்கு 6 சின்னங்கள்
-
நாங்களும் விஜய் ரசிகர்கள் தான்: அமைச்சர் அனிதா பளிச் பதில்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பன்னீர்செல்வம் ஓட்டு சேகரிப்பு
-
நெல்லிக்குப்பத்தில் பயிற்சி: 93 பேர் மின்வாரிய தேர்வில் வெற்றி
-
பாரபட்சம் இன்றி வாகன சோதனைக்கு கோரிக்கை