மீனவர் வெட்டிக்கொலை; சிறுவன் உட்பட 3 பேர் கைது

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கீழவைப்பாரை சேர்ந்தவர் ஜாய் விக்டோரியன், 32; மீன்பிடி தொழில் செய்தார். ஏப்., 3ம் தேதி இரவு, திரேஸ்புரம் கடற்கரையில் நண்பர்கள் சிலருடன் மது அருந்தினார்.

அப்போது ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த மூவர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜாய் விக்டோரியனை வெட்டி தப்பினர். காயமடைந்த அவரை, சக மீனவர்கள் மீட்டு, துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அவர் உயிரிழந்தார்.

கொலை வழக்கு பதிவு செய்த வடபாகம் போலீசார், திரேஸ்புரத்தை சேர்ந்த லிக்சன், 24, ஜாஸ்பர், 29, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement