கலெக்டர் அலுவலகததுக்கு  மீண்டும் குண்டு மிரட்டல் 

கோவை:ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு, கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

வழக்கமான சோதனைக்கு பிறகு, இது வழக்கமான புரளி என போலீசார் தெரிவித்தனர்.

சில மாதங்களாகவே கோவையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது. கலெக்டர் அலுவலகத்திற்கு மட்டுமே 25 முறைக்கு மேல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

விசாரிக்கிறோம், புலனாய்வு செய்கிறோம், நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம் என போலீசார் பொறுமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர, புலனாய்வில் ஒரு அடியாவது முன்னேற்றம் உண்டா என்று கேட்டால் பதில் இல்லை.

வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், போலீஸ் பராமரிப்பில் உள்ள மோப்ப நாய்கள் ஆக்டிவாக இருப்பதற்காக யாராவது சைபர் களத்தில் விளையாடுகிறார்களோ என்றும் சிலருக்கு சந்தேகம். எப்படியும் தேர்தல் முடியும் வரை போலீசுக்கு இதில் கவனம் செலுத்த அவகாசம் கிடைக்காது.

Advertisement