தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது
திருச்சுழி:திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் வாலிபரை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
சவ்வாஸ்புரத்தில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் மாங்குளத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணன், 20, கருப்பசாமி, 21, மற்றும் சில இளைஞர்கள் கஞ்சா போதையில் கையில் வாளுடன் சுற்றி திரிந்தனர். இதை அதே ஊரைச் சேர்ந்த மில் தொழிலாளி வேல்முருகன், 33, சத்தம் போட்டு உள்ளார்.
இதனால் கோபமடைந்த அவர்கள் அன்று அதிகாலை 3:00 திருவிழா முடிந்த பின் வேல்முருகனை , மறைந்திருந்து கருப்பசாமி, மாரிக்கண்ணன் மற்றும் இளைஞர்கள் வாளால் வெட்டி கொன்றனர். இது தொடர்பாக சவ்வாஸ் புரத்தைச் சேர்ந்த நாகராஜன் 20, இந்திரஜித், 20, மாரிக்கண்ணன், 20 ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்து ஜெயிலில் அடைத்தனர்.
___
படம் உள்ளது
___
படம் உள்ளது
மேலும்
-
ராஜஸ்தான் அணி அசத்தல் ஆட்டம் * பெங்களூரு அணி திணறல்
-
அ. தி.மு.க., வேட்பாளர் பள்ளி வாசலில் ஓட்டு சேகரிப்பு
-
மற்றவர்களுக்கு தொகுதி குறித்து ஏதும் தெரியாது: அமைச்சர் கணேசன் பேச்சு
-
கடலுார் காங்., வேட்பாளர் வீதி வீதியாக பிரசாரம்
-
தி.மு.க., மீனவர்களுக்கு துரோகம் இழைத்தது; அ.தி.மு.க., காளியம்மாள் குற்றச்சாட்டு
-
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்; பா.ம.க., வேட்பாளர் உத்தரவாதம்