காலையில் வெயில் மாலையில் மழை :ஸ்ரீவி., மக்கள் நிம்மதி

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் கடந்த சில நாட்களாக காலையில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாத நிலையில் மாலை நேரத்தில் கொட்டும் மழையால் குளிர்ந்த சூழல் ஏற்பட்டு வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக நகரில் வெயிலின் தாக்கம் காலை 9:00 மணி முதல் காலை கொளுத்த துவங்குகிறது. இதனால் 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ரோடுகளில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் மாலை 5:00 மணிக்கு மேல் மேகங்கள் திரண்டு குளிர்ந்த சூழல் ஏற்பட்டு சாரல் மழை பெய்து வருவதால் இரவில் புழுக்கமின்றி துாங்க முடிவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement