பைக் - லாரி மோதல் புதுமண தம்பதி உயிரிழப்பு

துாத்துக்குடி: விருதுநகர் மாவட்டம், கஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன், 32. இவரின் மனைவி மனீஷா, 22. கடந்த மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது.

நேற்று முன்தினம் இரவு, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின், பைக்கில் ஊர் திரும்பிய போது, சாத்துார் சாலையில் உள்ள தனியார் கல்லுாரி அருகே, சிவகாசியில் இருந்து துாத்துக்குடி நோக்கி எதிரே வந்த லாரி, இவர்களின் பைக் மீது மோதியதில், மனோகரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மனீஷா, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்தார். கோவில்பட்டி கிழக்கு போலீசார், லாரி டிரைவர், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடை சேர்ந்த அபூபக்கரை கைது செய்தனர்.

Advertisement