ஈரோட்டில் 104 டிகிரி வெயில்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 104.2 டிகிரி வெயில் வாட்டியது. காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை கடும் வெப்பத்துடன் வெயில் வாட்டியது.

காலை, 11:00 மணிக்கு மேல், 4:00 மணி வரை கடும் அனல் காற்றும் வீசியதால், மக்கள் கடுமையாக பாதித்தனர். அதேநேரம், 2.6 முதல், 5.2 டிகிரி வரை வெயில் உயர்ந்தும், குறைந்தும் காணப்பட்டது.* ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரட்டுபள்ளம் அணை பகுதியில், 35.60 மி.மீ., மழை, கவுந்தப்பாடியில், 29.60 மி.மீ., மழை பெய்தது.

Advertisement