திருநங்கை தினம் கொண்டாட்டம்

விழுப்புரம்: தமிழ்நாடு தென்னிந்திய திருநங்கை கூட்டமைப்பு சார்பில் திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டது.

விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைவி மோகனாம்பாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவி நுாரி, செயலாளர் கங்காம்மாள், துணைச் செயலாளர் சுபிக்ஷா முன்னிலை வகித்தனர். இதில், திருநங்கை தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

அப்போது, பொருளாளர் சோனியா, நிர்வாக உறுப்பினர்கள் சர்மிளா, சீமா, விழுப்புரம் மாவட்ட தலைவி விமலா, ஒருங்கிணைப்பாளர் அருணா மற்றும் தமிழகம், புதுச்சேரி ஒருங்கிணைந்த 42 மாவட்ட திருநங்கை தலைவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement