போதை மாத்திரை விற்ற பெண் உட்பட மூவர் கைது
எம்.கே.பி.நகர்: போ தை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி, முல்லை நகர் சுடுகாடு அருகே, போதை மாத்திரை விற்பதாக எம்.கே.பி.நகர் போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட, கொளத்துார், அஜி நகரைச் சேர்ந்த சரவணன், 30, வியாசர்பாடி, எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கொடுங்கையூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தாரணி, 27, நெற்குன்றம், சக்தி நகரைச் சேர்ந்த கோயம்பேடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான தினேஷ்குமார், 26, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 800 போதை மாத்திரைகள், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் 75,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்கணும்: அண்ணாமலை ஆதரவு குரல்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் பலி
-
'தினமலர் - தமிழ் சங்கம் நாசிக்' இணைந்து மஹாராஷ்டிரா தமிழர்களை கொண்டாடுகிறோம்
-
விஜய் நேரில் வந்து பேசுவது போல் பிரசாரம்; புதிய தொழில்நுட்பத்துடன் களம் இறங்கிய வேட்பாளர்
-
காமன்வெல்த் ஊழல்; காங்கிரஸ் தலைவர் சிக்கியது இப்படித்தான்!
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
Advertisement
Advertisement