வாக்காளர்களை 'கவனிக்க' தனியார் ஏஜன்சி தயார்
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., த.வெ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதனால் மாவட்டத்தில்9 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தேர்தல் நெருங்கி வருவதால் தொகுதி முழுவதும், வாக்காளர்களை கவனிக்க, பல்வேறு திட்டங்களை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை கவனித்ததில் குறைந்த பட்ச நேர்மை கூட இல்லை எனவும், பல இடங்களை அவர்களை கண்டு கொள்ளவே இல்லை எனவும், குறிப்பிட்ட கட்சி தலைமைகளுக்கு புகார்கள் சென்றன.
இந்நிலையில், அந்தந்த பகுதி வார்டு செயலா ளர்கள் மூலம் தனியார் ஏஜன்சி அலுவலர்கள் நேரிடையாக சென்று குறிப் பிட்ட வாக்காளர்களை 'கவனிக்க'முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
-நமது நிருபர்-:
மேலும்
-
சிவகாசி சிவன் கோயில் மாட வீதியில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
-
ரயில்வே ஸ்டேஷன்களுக்கு நேரடி பஸ் வசதி இல்லை...சிரமம்: வாகன வசதியின்றி கூடுதல் கட்டணங்களால் வேதனை
-
மத்திய அரசை விமர்சிக்கும் அருகதை கனிமொழிக்கு இல்லை: அண்ணாமலை
-
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன்:முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி
-
உறவினரை முதல்வராக்க மம்தா முயற்சி: அமித்ஷா
-
சட்டசபை தொகுதி வாரியாக அலுவலர்கள் பணி ஒதுக்கீடு