சிறுமிக்கு பாலியல் தொல்லைவாலிபருக்கு 20 ஆண்டு சிறை

திருப்பூர்: திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

கடந்த, 2020 மார்ச் 23 அன்று, திருப்பூர் கே.வி.ஆர். நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, வடிவேலு, 33 என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வழக்கு விசாரணை, திருப்பூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கில் தீர்ப்பு வழங்கிய, நீதிபதி கோகிலா, வடிவேலுவுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கை சிறப்பாக கையாண்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருப்பூர் மாநகர கமிஷனர் பாராட்டினார்.

Advertisement