விழிப்புணர்வு பிரசாரம்

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி ஒன்றியம், தேக்கம்பட்டி ஊராட்சி சமத்துவபுரத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

துணை பி.டி.ஓ., லட்சுமிநாராயணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவ மாணவிகள் ஓட்டு போடுவது உங்கள் உரிமை கடமை என்றும், நூறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊர்வலம் சென்று பிரசாரம் செய்தனர். ஏற்பாடுகளை தேக்கம்பட்டி ஊராட்சி செயலாளர் ஜீவா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Advertisement