மானாமதுரையில் சித்திரை திருவிழா :வைகை ஆற்றுக்குள் ராட்டினங்கள்

மானாமதுரை:மானாமதுரையில் வரும் 21ல் சித்திரை திருவிழா துவங்கவுள்ள நிலையில் வைகை ஆற்றுக்குள் ராட்டினங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் வரும் 21ம் தேதி காலை 7:25 மணிக்கு கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 28ம் தேதி காலை 10:35 மணிக்கும்,தேரோட்டம் மறுநாள் 29ம் தேதி காலை 9:00 மணிக்கும் நடைபெற உள்ளது.

70 வருடங்களுக்கு பிறகு 2 பெரிய தேர்கள் வீதி உலா வர உள்ளது.இத்திருவிழாவின் போது கோயில் எதிர்புறம் உள்ள வைகை ஆற்றுக்குள் ராட்டினங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள், கடைகள் அமைக்கப்படுகிறது.

Advertisement