இணையத்தில் ஜனநாயகன் திரைப்படம்: ரஜினி, கமல் கண்டனம்
சென்னை: தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.
தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்து வெளியாக தயாராகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். விஜயின் கடைசி படம் என்ற அறிவிப்பால், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால், படம் வெளியாவதற்கு பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் முழுதும் 'டெலிகிராம்' செயலியில் வெளியாகி, தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது. இவ்வாறு அந்தப்பதிவில் ரஜினி கூறியுள்ளார்.
@twitter@https://x.com/rajinikanth/status/2042621670465376520twitter
சிஸ்டம் தோல்வி
கமல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது
ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது விபத்து அல்ல. அது ஒரு சிஸ்டம் தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது. உரிய சட்ட நடைமுறைகள் சரியான நேரத்தில் பின்பற்றப்பட்டு இருந்தால் நாம் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டோம். சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், திருட்டுப் பிரதிகளுக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கின. சட்டப்பூர்வமான அணுகல் தடைபடும்போது, சட்டவிரோத நடவடிக்கைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
பைரசி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அது கலை மற்றும் கலைஞர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல். அது, நூற்றுக்கணக்கான கலைஞர்கள், தொழில்நுட்பநிபுணர்களின் உழைப்பையும், தயாரிப்பாளர்கள், சினிமா திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் முதலீடுகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது. அமைப்பு தோல்வியடையும்போது படைப்பாளியை யார் பாதுகாப்பார்கள்? விரைவான சான்றிதழ் வழங்குதல், கடுமையான அமலாக்கம் தேவை. கடந்த காலத்தில் எனக்குத் துணையாக நின்றதைப் போலவே, உண்மையான சினிமா ரசிகர்கள் ஒன்றிணைந்து, சட்டப்பூர்வமாக திரையரங்குகளில் இப்படத்தைப் பார்த்து தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
@twitter@https://x.com/ikamalhaasan/status/2042644301872796082twitter
இதுக்கு எல்லாமும் வாயை திறப்பாங்க இந்த சினிமா நடிகர்கள். விவசாயிக்கு ஒண்ணுன்னா வாயி மூடிட்டு இருப்பாங்க
தன் சினிமாவை கூட காப்பாற்ற முடியாத இவர் நாட்டை ஆளணுமாம் . சீர்கேடு சினிமா ஒழியட்டும்
விஜய் அவர்கள் சினிமா சம்பந்தமான அனைத்தையும் முடித்த பின்பே அரசியலுக்குள் வந்திருக்க வேண்டும். அல்லது அரசியலுக்குள் பிரவேசிப்போம் என்னும் எண்ணம் துளிர் விட தொடங்கும் போதே சினிமா சம்பந்தமான அத்தனையையும் மூட்டைக் கட்டியிருக்க வேண்டும். சூது நிறைந்த உலகத்தில் நாம்தான் நம்மை விழிப்புணர்வாக பார்த்துக் கொள்ள வேண்டும். விஜய் படத் தயாரிப்பாளரை நினைத்து உண்மையிலேயே வருத்தப்பட்டால் தான் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை அப்படியே திருப்பிக் கொடுத்து விடுவது சாலச் சிறந்தது. அதோடு சினிமாவில் இருக்கும் போது கிடைத்த ஆதரவை அரசியலுக்குள் கொண்டு வராமல் இருப்பது அவரது அரசியல் வளர்ச்சிக்கு மிக இன்றியமையாதது
அப்பாவி ரஜினி!
படம் எலக்ஷனுக்கு முன்னால் வெளியாக வேண்டி... படத்தின் நாயகரே குறுக்கு வழியில் வெளியிட்டிருக்கவே 100% சாத்யம்!
சினிமா எடுக்கிறேன் என்று நாட்டை கெடுக்கும் இந்த கருப்பு பண முதலைகள் நஷ்டம் அடைந்து சினிமா ஒழிந்தால் நாட்டுக்கு நல்லது
யாரோ திமுகக்காரன் செய்த வேலை இது.
இணையத்தில் வெளியிட்டது - சந்தேகமே இல்லை - விஜய்யின் எதிரி திமுகவினர்தான் இருக்கும். இது மிகவும் கீழ்த்தரமான அரசியல் சித்துவிளையாட்டு திமுகவினரால்.
திரை உலகம் தேசத்துரோகிகளை தலைமேல் வைத்து கொட்டாடும்.. தரம் என்பது துளிக்கூட இல்லாத சமூக விரோத சினிமா வெளியீடுகள் கசிந்தால் ரத்தக்கண்ணீர் விடும்..போதை மருந்து யாவாரம் தரும் வருமானத்தில் எடுக்கப்படும் படங்கள் மீது இவருக்கு ஏன் இந்த கரிசனம்?
அரசியல் படம். தேர்தலுக்கு முன் வெளி வருவதற்காக யாராவது விஷமிகள் செய்திருப்பார்களோ?மேலும்
-
ஓட்டு எண்ணும் மையத்தில் ஆய்வு
-
தர்மபுரியில் தே.மு.தி.க., பிரேமலதா பிரசார
-
எண்ணற்ற திட்டங்களை கொடுத்தவர் இ.பி.எஸ்., சங்ககிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
-
ஓசூரில் நாளை பிராமணர் குடும்ப கலாசார விழா
-
காரில் மது பாக்கெட் கடத்தியவர் கைது
-
வடக்கு தொகுதி பா.ம.க., வேட்பாளருக்கு பல்வேறு அமைப்பினர் சந்தித்து ஆதரவு