காய்கறி, பழம் பூக்களில் விழிப்புணர்வு  கண்காட்சி

ராமநாதபுரம்: தோட்டக்கலைத் துறை சார்பில் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் ஏப்.,23ல் சட்டசபை தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டளிப்பது தொடர்பாக காய்கறிகள், பழங்கள், பூக்களால் வடிவமைக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு குறித்த கண்காட்சி நடந்தது.

இக்கண்காட்சி அரங்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார். நுாறு சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காய்கறிகள், பழங்கள், பூக்களை பயன்படுத்தி நுாறு சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி எழுத்துக்களை வடிவமைத்தனர்.

பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஆறுமுகம், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் குழுவினர் பங்கேற்றனர்.-----

Advertisement