சுற்றுலா பஸ் மோதி ஆட்டோ ஓட்டுநர் பலி

பாலக்காடு: பாலக்காடு -- கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பஸ் ஆட்டோவில் மோதியதில், ஆட்டோ ஓட்டுநர் இறந்தார்.

கேரளா மாநிலம், பாலக்காடு ஒலவக்கோடு நீலிக்காடு பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத், 52.

நேற்று முன்தினம் மாலை நவ்ஷாத் தனது ஆட்டோவில் ஒலவக்கோட்டிலிருந்து முட்டிக்குளங்கரை நோக்கிச் சென்றார். அப்போது புதுப்பரியாரம் ஊராட்சி அலுவலகம் அருகே, செர்ப்புளச்சேரி பகுதியில் இருந்து ஏர்வாடி சென்ற சுற்றுலா பஸ், எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது.

இதில், ஆட்டோ முற்றிலும் உருக்குலைந்தது. படுகாயமடைந்த நவ்ஷாதை அங்கிருந்தவர்கள் மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். விபத்து குறித்து ஹேமாம்பிகா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement