வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

அன்னூர்: அன்னூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அன்னூர் வழக்கறிஞர்கள சங்கத்திற்கான, (ஏ.பி.ஏ.,) 2026-27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் அன்னூரில் நடந்தது.

இதில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவராக சிவ பார்த்தசாரதி, செயலாளராக சந்திரசேகர், இணை செயலாளராக ரேவதி பிரியா, நிர்வாக குழு உறுப்பினர்களாக விவேக், ராதா, விஜயகுமாரி, ஹரிப்பிரியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு, வக்கீல்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement