அதிருப்தியில் பயணிகள்
குன்னுார்: குன்னுார் வண்டிச்சோலை வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் அதிக சப்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. இதனால், வயதானவர்கள் மற்றும் மகளிர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பயணிகள் கூறுகையில், 'இங்குள்ள கல்லுாரியில் மாணவிகள் அதிகம் வரும் நிலையில், மினி பஸ்சில் அதிக சப்தத்துடன், சமூக சீரழிவுக்கு காரணமாகும் குறிப்பிட்ட சினிமா பாடல்களை ஒலிபரப்பி வருகின்றனர். இது மட்டுமில்லாமல் அதிவேகத்திலும் இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, இத்தகைய மினி பஸ்களை ஆய்வு செய்து, அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓட்டு கட்டட பள்ளிகள் சீரமைக்கப்பட வேண்டும்
-
வரத்து கால்வாயில் கழிவுநீர் தேங்கி புதர்மண்டியுள்ளது
-
தேர்தல் முடிந்ததும் தேக்கடியில் குவியும் சுற்றுலா பயணிகள்
-
திருச்சூருக்கு நேரடி பஸ் இயக்க இருமாநில மக்கள் கோரிக்கை
-
தரைமட்ட பாலத்தை உயர்த்த வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை
-
புதர் சூழ்ந்து வீணாகும் பொது கழிப்பிடம்
Advertisement
Advertisement