புதர் சூழ்ந்து வீணாகும் பொது கழிப்பிடம்

1

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் உள்ள பொது சுகாதார கழிப்பிடம் உபயோகமில்லாமல் இருப்பதால், புதர் சூழ்ந்து காணப்படுகிறது.

கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் மக்கள் நலனுக்காக தனியார் நிறுவனம் சார்பில், சி.எஸ்.ஆர். நிதியில் இருந்து கடந்த, 2023ம் ஆண்டில், இரண்டு பொது சுகாதார கழிப்பிடங்கள் கட்டப்பட்டன. தற்போது இந்த கழிப்பிடங்களை சுற்றிலும் செடி கொடிகள் முளைத்து புதர் சூழ்ந்து காட்சியளிக்கிறது.

இந்த கட்டடத்தின் வெளிப்புற தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இல்லாமல், கற்கள், பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்டவைகள் கிடக்கிறது. இதில் ஒரு கழிப்பிட கட்டடம் மாதக்கணக்கில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மக்கள் கூறுகையில், 'கழிப்பிடம் கட்டப்பட்டு சிறிது நாட்கள் கழித்து தண்ணீர் வரத்து இல்லை. இதனால் மக்கள் இதைப் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டனர். விரைவில் இதை சரி செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement