மல்பரி செடிகள் வளர்ப்பு :விவசாயிகளுக்கு பயிற்சி

கூடலுார்: கூடலுார் தோட்ட கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், மல்பெரி செடிகள் வளர்ப்பு குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது.

வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரூபினா , உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஜெகதீஸ்வரன், டாமிசா ஆகியோர் மல்பெரி செடிகள் நடவு மற்றும் பராமரிப்பு குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு, சாகுபடிக்கு தேவையான பாஸ்பரஸ் கரைப்பான், நைட்ரஜன் கரைப்பான் பொட்டாசியம் கரைப்பான் கொண்டு தொகுப்பினை வழங்கினர்.

Advertisement