மொபைல் பயன்படுத்திய பூத் ஏஜென்ட் மீது வழக்கு  

புதுச்சேரி: ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போனை பயன்படுத்திய பூத் ஏஜென்ட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. ஓட்டுச்சாவடிக்குள் யாரும் மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது என, அந்த ஓட்டுச்சாவடியில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஓட்டுப் பதிவு நடக்கும் முன்பாக அறிவுறுத்தினார்.

இந்நிலையில், உருளையன்பேட்டை தொகுதி 4வது ஓட்டுச்சாவடியில் பூத் ஏஜென்டாக இருந்த லாஸ்பேட்டையை சேர்ந்த ராஜேஷ், 25; என்பவர் மொபைல் போனை பயன்படுத்தினார். அப்போது, ஓட்டுச்சாவடி தலைமை அதிகாரி பாக்கிலட்சுமி பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் பிடித்து கொடுத்தார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் பூத் ஏஜென்ட் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement