மொபைல் பயன்படுத்திய பூத் ஏஜென்ட் மீது வழக்கு
புதுச்சேரி: ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போனை பயன்படுத்திய பூத் ஏஜென்ட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. ஓட்டுச்சாவடிக்குள் யாரும் மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது என, அந்த ஓட்டுச்சாவடியில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஓட்டுப் பதிவு நடக்கும் முன்பாக அறிவுறுத்தினார்.
இந்நிலையில், உருளையன்பேட்டை தொகுதி 4வது ஓட்டுச்சாவடியில் பூத் ஏஜென்டாக இருந்த லாஸ்பேட்டையை சேர்ந்த ராஜேஷ், 25; என்பவர் மொபைல் போனை பயன்படுத்தினார். அப்போது, ஓட்டுச்சாவடி தலைமை அதிகாரி பாக்கிலட்சுமி பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் பிடித்து கொடுத்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் பூத் ஏஜென்ட் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 கிலோ தங்கம் மோசடி தம்பதி உள்பட 4 பேர் கைது
-
தி.மு.க., தேர்தல் அறிக்கைதான் 'சூப்பர் ஸ்டார்' அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., பெருமிதம்
-
ரயில் சரக்கு போக்குவரத்து வருவாய் ரூ.337 கோடியாக அதிகரிப்பு
-
ரேவதி மெடிக்கல் சென்டரில் நாளை இருதய மருத்துவ முகாம்
-
பால் கொள்முதல் விலை உயர்த்தக்கோரி தர்ணா
-
டீ, காபியுடன் சரி; எங்களை கண்டு கொள்வதில்லை தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் புலம்பல்
Advertisement
Advertisement