காயலான் கடைக்காரரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

கொடுங்கையூர்: கொடுங்கையூர், எம்.ஆர்.நகர் சந்திப்பு அருகில், தேர்தல் பறக்கும் படையினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவ்வழியே வந்த பைக்கை வழிமறித்து சோதனையிட்ட போது, 1.06 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், கொடுங்கையூர், மீனாம்பாள் சாலையைச் சேர்ந்த கமலேஷ்குமார், 21 என்பதும், கயலான் கடை நடத்திவரும் இவர், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது.

உரிய ஆவணம் இல்லாததால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, பெரம்பூரில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement